Motto
Shine On
Contact
chavaladiescollege@gmail.com principal@chavalady.sch.lk
Our Principal
Mrs.S.Sivanathan SLPS I

Archive for November, 2010

கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று சிறப்புற இடம்பெற்றன. அந்நிகழ்வின் காட்சிகளில் சில

யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் பசுமை நிறைந்த நாடு வேலைத்திட்டச் செயற்பாடுகள் 10.11.2010 அன்றிலிருந்து பாடசாலை நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
சுற்றாடல் கீதம் அறிவித்தல் பலகையில் இடப்பட்டு மாணவர்கள் மரநடுகைக்குத் தேவையான மரங்களைக் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். ஒக் 15 இலிருந்து காலைப் பிரார்த்தனையில் மரம் நடுகைத் திட்டத்தினை முன்னெடுப்பதன் பயன்கள், சூழல் மாசடைவு போன்ற கருப்பொருட்களில் கருத்துரைகள் வழங்கப்பட்டு வந்தன.
மாணவர்களால் கொண்டு வரப்பட்ட மரங்கள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டதுடன். அவற்றை நடுவதற்கான குழிகளில் இயற்கைப் பசளை இடப்பட்டு மரநடுகைக்குத் தயார்ப்படுத்தப்பட்டன.
15.11.2010 அன்று எமது கல்லூரியில் 9.45 மணிக்கு மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியது. முதலில் மாணவிகளால் சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி அதிபர் அவர்களினால் மரநடுகைத் தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. 10.07 மணிக்கு 1வது மரக்கன்று பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு. எஸ் அருட்பிரகாசம் அவர்களால் நாட்டப்பட்டது தொடர்ந்து அதிபர் திருமதி. சி.சிவநாதன் மரக்கன்றை நாட்டினார். பின்னர் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.

மா-05
பலா-07
கொய்யா-10
கமுகு-02
சமன்டலை-02
வாழை-06
மாதுளை-06
முந்திரி-03
தென்னை-09
கருவேம்பு-04
வேம்பு-06
பப்பாளி-08
விளாத்தி-02
எலுமிச்சை-09
தோடை-02
ஜம்புநாவல்-03
சண்டி-02
லாவுலு-01

கமநலசேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 07 மரங்களும் வலயக்கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 08 மரங்களும் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்களால் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்பட்ட 70 மரங்களும் ஆக மொத்தம் 85 மரங்கள் அன்றையதினம் நாட்டப்பட்டன.
மரநடுகை நிகழ்வானது நண்பகல் 12.15 மணிக்கு நிறைவிற்கு வந்தது.

Who are online
Useful Educational links
November 2010
M T W T F S S
« Oct   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Weather Report