
24.10.2012 புதன்கிழமை விஜயதசமி விழாக் கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற அதிபா் திரு. சுப்பிரமணியம் அவா்களால் மாணவா்களுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது. மற்றும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாலை கட்டுதல், கோலம் போடுதல் மனனம் ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவா்களுக்கு சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினரால் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 9 மாணவா்கள் சித்தியடைந்தனா். செல்வன். ம. கோபிதன் 188 புள்ளிகளைப் பெற்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். மற்றும் சி.அபிசன் 179, ந.சரண்யா 171, உ.மிதுலா 165, சி.ஆதிரை 162, க.தனஞ்செயன் 161, பி.துசாந் 156, அ.கபிலன் 150, சு.ஜெசிபன் 148 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்தனா். அத்துடன் 14 மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர்.
அவா்களைக் கௌரவிக்கும் முகமாக 15.10.2012 திங்கட்கிழமை அன்று விழா எடுக்கப்பட்து. பிரதம விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலயக் கல்விப்பணிப்பாளா் திரு.கு.பிறேமகாந்தன் அவா்களும் சிறப்பு விருந்தினா்களாக ஜனசக்திக் காப்புறுதி நிறுவனப் பிரதிப் பொது முகாமையாளா் திரு.அன்ரன் ஜோசப் அவா்களும், உதவிப்பிராந்திய விற்பனை முகாமையாளா் திரு.வசந்தகுமார அவா்களும் கலந்து சிறப்பித்தார்கள். சித்தியடைந்த மற்றும் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவா்களுக்கு பாரிசில்களும் வழங்கப்பட்டன.
04.08.2012 சனிக்கிழமை மொழித்தின தின விழா நடைபெற்றது. விருந்தினர்களாக தென்மராட்சிக் கல்வி வலயக் தமி்ழ்ப்பாட உதவிக்கல்விப்பணிப்பாளா் திரு.சின்னத்துரை அவா்கள், ஆங்கிலபாட உதவிக்கல்விப்பணிப்பாளா் திருமதி C.A திருக்குமார் அவா்கள் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகா்கள் திருமதி.க.சிறீதரன் (தமி்ழ்) ,திருமதி. சி. சிறீதரன் (ஆங்கிலம்) அவா்களு்ம் கலந்து சிறப்பித்தனா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன
16.01.2012 திங்கட்கிழமை தரம் 1 மாணவா்களை வரவேற்கும் முகமாக கால்கோள் விழா நிகழ்வு இடம்பெற்றது. இதற்குப் பிரதம விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலயக் கல்விப்பணிப்பாளா் திரு.கு.பிறேமகாந்தன் அவா்களும் மற்றும் இந்துசமய, கிறிஸ்தவ சமயக் குருமார்களும் கலந்து சிறப்பித்தார்கள். புதிதாக 69 மாணவா்கள் இணைந்து கொண்டனா்.
மாணவா்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் 18.06.2012 திங்கட்கிழமை அன்று கல்லூரி மண்டபத்தில் அதிபா் சி.சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது.
சிரேஸ்ட மாணவ தலைவி – சி.கார்த்திகா
Read the rest of this entry »
எமது பாடசாலையில் 1ம், 2ம் தவணைகளுக்கான கற்பித்தல் உபகரணக் கண்காட்சி 21.03.2012 புதன்கிழமை அன்று நடைபெற்றது. விருந்தினா்களாக வலயக்கல்விப் பணிப்பாளா் திரு.க.பிறேமகாந்தன் அவா்களும், பிரதிக்கல்விப் பணிப்பாளா்களான திரு. பி.முத்துலிங்கம், திரு.பொ.இரவிச்சந்திரன் அவா்களும் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளா்கள்,ஆசிாிய ஆலோசகா்களும் கலந்து சிறப்பித்தனா்.
Read the rest of this entry »
எமது பாடசாலையின் வருடாந்த பாிசளிப்பு விழா 14.10.2011 வெள்ளிக்கிழமை கல்லுாாி முதல்வா் திருமதி.சி.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தருமாகிய செல்வி. வசந்தி அரசரட்ணம் அவா்களும், விருந்தினா்களாக தென்மராட்சிக்கல்விப்பணிப்பாளா் திரு.கு.பிறேமகாந்தன் , பிரதிக்கல்விப்பணிப்பாளா்கள், சாவகச்சோி நகரசபைத்தலைவா், செயலாளா், உதவிப் பிரதேச செயலா் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்
Read the rest of this entry »
எமது பாடசாலையில் ஆசிாியா்களின் மூன்றாம் தவணைக்கான கற்பித்தல் சாதனக் கண்காட்சி 29.09.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளா் திரு.பொ.இரவிச்சந்திரன் அவா்களும் மற்றும் தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளா்கள், உதவிக்கல்விப் பணிப்பாளா்கள் , சேவைக்கால ஆசிாிய ஆலோசகா்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்.
பாடசாலை க.பொ.த (சா.த) , க.பொ.த (உ.த) மாணவா்கள் அகில இலங்கை ாீதியான கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனா்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான பொலநறுவை, மிகிந்தலை, கண்டி, திருகோணமலை, சிகிாியா ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.


Mrs.S.Sivanathan SLPS I
